தமிழ் சினிமா

18 வருட வாழ்க்கை என்னாச்சு… விவாகரத்து கேட்டு கோர்ட்டில் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதி விண்ணப்பம்..!! 

நடிகர் தனுஷும், நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கடந்த 2004 ஆம் ஆண்டும் நவம்பர் 18 தேதி காதலித்து திருமணம் செய்தனர்.

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். கடந்த 2004 ஆம் ஆண்டும் நவம்பர் 18 தேதி காதலித்து திருமணம் செய்தனர்.

அதன் பின் 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில் பிரிந்துவிட்டார்கள். அதனைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார்.இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். 

இது குறித்து அவர்களே தங்கள் சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்த நிலையில் தற்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது…

Related Articles

  • Be the first to comment

Back to top button